நல்வரவு

வணக்கம் !

Friday 2 January 2015

நான் ரசித்த துணுக்குகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து!
என் கைபேசியில் அவ்வப்போது வரும் ஆங்கிலக் குறுஞ்செய்திகளுள்  நான் மிகவும் ரசித்தவற்றை நீங்களும் ரசிக்க, மொழியாக்கம் செய்து இங்கே பகிர்ந்துள்ளேன்:-


துணுக்கு 1
அம்மா:-  “திப்பு சுல்தான்னா யாருன்னு தெரியுமா ஒனக்கு?”
பையன்:-  “தெரியாது”
அம்மா:- “அப்பப்ப கொஞ்சம் படிப்புலேயும் கவனம் செலுத்து”
பையன்:-  “நிம்மி ஆண்டின்னா யாருன்னு தெரியுமா ஒங்களுக்கு?”
அம்மா:- “தெரியாதே”
பையன்:- “அப்பப்ப கொஞ்சம் அப்பா மேலேயும், கவனம் செலுத்துங்க”

துணுக்கு 2
பாராளுமன்றத்துக்கு எதிரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது ஒரு கார்.. 
திடீரென்று காரின் கண்ணாடியைத் தட்டினான் ஒருவன்.  ஜன்னலை இறக்கிய டிரைவர், “என்ன பிரச்சினை இங்க?” என்று கேட்டார்.

“இந்தியாவோட எல்லா அரசியல்வாதிகளையும் தீவிரவாதிங்க கடத்திட்டாங்க.   அவங்களை விடுவிக்கப் பிணையத்தொகையா நூறு  மில்லியன் டாலர் பணம் கேட்கிறாங்க.  அதைக் கொடுக்கலேன்னா எல்லார் மேலேயும்,  பெட்ரோல் ஊத்திக் கொளுத்தப் போறாங்களாம்.   நாங்க ஒவ்வொரு காராப் போயி, நன்கொடை வசூலிச்சிக்கிட்டிருக்கோம்,” என்றான் அவன். 

ஒவ்வொருத்தரும் சராசரியா எவ்ளோ கொடுக்கிறாங்க? என்றார் டிரைவர்.

ஏறக்குறைய இரண்டு லிட்டர் என்றான் அவன்!


துணுக்கு 3
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது என் நண்பர் நன்கு குடித்த பிறகு போதையில் கார் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துக் காரை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு, பேருந்து ஒன்றில் வீட்டுக்குப் பயணமானார்.  தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி அடுத்த நாள் அவருக்குப் பெருமை.தாங்கவில்லை.

இருக்காதா பின்னே? அதற்கு முன்னர், அவர் பேருந்தே ஓட்டியதில்லையாம்!

துணுக்கு 4
ஆசிரியர்: “ஏன் தாமதமா வர்றே?”

மாணவன்:- “அம்மாவும், அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க சார்!

ஆசிரியர்:- “அவங்க சண்டை போட்டதுக்கும்,  நீ தாமதமா வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?”


மாணவன்:- “என்னோட ஒரு செருப்பு அப்பா கையிலேயும்,  இன்னொன்னு அம்மா கையிலேயும் இருந்துச்சி சார்!”

துணுக்கு 5

குடித்து விட்டு வீடு திரும்பினான் கணவன்,  மனைவி திட்டுவாளே என்ற பயத்தில் மடிக்கணிணியை எடுத்து வைத்து அவசரமாகத் தட்டச்சு செய்யத் துவங்கினான்.

இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கிறியா?

இல்ல இல்ல டார்லிங்!

இடியட்! அப்புறம் ஏன், என்னோட சூட்கேஸை எடுத்து வைச்சிக்கிட்டு டைப் செய்யற மாதிரி நடிக்கிறே?


துணுக்கு 6
கம்பெனியில் ஜூனியர் ஒருவன் தவறுதலாக முதலாளி தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்து, “என் அறைக்கு இரு நிமிடங்களில் காபி அனுப்பு,” என்றான்

“யாருடன் பேசுகிறோம் என்று தெரியுமா உனக்கு?” என்று சத்தம் போட்டார் அவர்.

“தெரியாது”

“நான் தான் இந்த கம்பெனியோட பாஸ்”

“யாருடன் பேசுகிறோம் என்று தெரியுமா உங்களுக்கு?” என்று அதே தொனியில் திருப்பிக் கேட்டான் இவன்.

“தெரியாது:

“நல்லவேளை தெரியவில்லை; கடவுளுக்கு நன்றி!” என்று மனதுக்குள் சொன்னவாறு உடனே இணைப்பைத் துண்டித்தான் ஜூனியர்.


துணுக்கு 7
பாகிஸ்தான் சிறுவன் அமெரிக்கப் பள்ளியில் சேர்ந்தான்.

“உன் பெயர் என்ன?” என்றார் ஆசிரியை.

“நதீர்!”

“நீ இப்போது அமெரிக்காவில் இருக்கிறாய்   இன்றிலிருந்து உன் பெயர் நதீர் இல்லை.  ஜானி,” என்றாள் அவள்.

பையன் வீட்டுக்குப் போனதும், முதல் நாள் பள்ளி அனுபவம் பற்றிக் கேட்டாள் அம்மா.

“நான் இப்போது அமெரிக்கன்.  இனிமேல் என்னை ஜானி என்று தான் கூப்பிட வேண்டும்”

பெற்றோர் இருவரும் கடுப்பாகி, பையனை அடித்துத் துவைத்து விட்டனர்.

மறுநாள் காயங்களுடன் சென்ற அவனைப் பார்த்துக் கேட்டாள் ஆசிரியை:

“ஜானி என்ன ஆச்சு உனக்கு?”

“மேம்! நான் அமெரிக்கன் ஆகி சரியாக ஆறுமணி நேரத்துக்குப் பிறகு, இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டேன்,” என்றான் அவன்.


துணுக்கு 8

ஒரு நாள் படகு போன்ற பெரிய காரில் பயணம் செய்து கொண்டிருந்த பணக்காரர் ஒருவர், சாலையின் ஓரத்தில் இருவர் புல்லைத் தின்று கொண்டிருந்ததைக் கண்டவுடன் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்..

அவர்களுள் ஒருவனைப்பார்த்து, “ஏன் புல்லைத் தின்றே?” என்று கேட்டார்

“சாப்பாடு வாங்க எங்கக்கிட்ட பணம் இல்ல;  அதனால் தான் புல்லைத் தின்றோம்,” என்றான் அவன்.

“அப்படீன்னா என் வீட்டுக்கு வா,” என்றார் அவர்

“ஆனால் எனக்கு ஒரு மனைவியும் அஞ்சு பசங்களும் இருக்காங்களே!”

“அதனால என்ன? அவங்களையும் அழைச்சிட்டு வா,”

இன்னொருவனை பார்த்து, “நீயும் வா,” என்றார்

காரில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு பயணிக்கையில் ஒருவன் சொன்னான்

“சார் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு; எங்க எல்லாரையும் ஒங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப்  போறதுக்கு ரொம்ப நன்றி.”

“அதனால பரவாயில்லை. ஒங்களுக்கு உதவி செய்றதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.   உங்க எல்லோருக்கும் என் வூடு ரொம்பப் புடிக்கும்.  அங்க ஒரு மீட்டர் அளவுக்கு புல் வளர்ந்திருக்கு” என்றார் அவர்.


24 comments:

  1. ஹ...ஹா..... துணுக்குகளின் ரசிகன் நான்...

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

      Delete
  2. எல்லா ஜோக்குகளுமே மிகவும் ரசிக்கும்படியாக இருந்தன. கடைசி 8 வது ஜோக் மட்டும் பாதி படிக்கும்போதே மீதி இப்படித்தான் இருக்கும் என நானே யூகித்துவிட்டேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்! 0எட்டாவது துணுக்கில் முடிவை யூகித்தது சிறப்பு!

      Delete
  3. வணக்கம்
    துணுக்குகளை இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் பாராட்டியதற்கு மிக்க நன்றி ரூபன்!

      Delete
  4. Replies
    1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம்!

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசி கோபால்!

      Delete
  6. வணக்கம் தோழி. எப்படி இருக்கிங்க ? என்னை நினைவிருக்கா ?
    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சசிகலா! உங்களை மறக்க முடியுமா? நான் நலந்தான். நீங்களும் நலந்தானே? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்!

      Delete
  7. வலைச் சரம் வழியே வந்தேன்.

    ஜோக்குகள் அபாரம். சிரித்து சிரித்து சின்னா பின்னம் ஆகிவிட்டேன்.

    எது எல்லாத்தை விட ஏ ஒன் ?

    அந்த பையன் அம்மா கிட்டே அப்பா மேல அப்பப்ப கண் வச்சுக்க...

    சூப்பர்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.movieraghas.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்துச் சிரித்தமைக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  8. வலைச்சரத்தில் - பணியேற்கும் தங்களுக்கு நல்வரவு!..

    அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி துரை சார்! வலைச்சரம் வழியே தங்களது முதல் வருகை என்னை மகிழ்விக்கிறது!

      Delete
  9. காலையில் தங்களது தளத்திற்கு வந்ததற்கு - நல்லதோர் நகைச்சுவை விருந்து!..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்தமைக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  11. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. வலைச்சரத்தில் அண்மையில் தங்களது பதிவுகளைப் படித்தேன். தங்களது வலைப்பூவில் நகைச்சுவைகளை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சார்!

      Delete