tag:blogger.com,1999:blog-9146668320240403831.post1329511498551338052..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: போர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58194807775355125032019-09-03T01:18:10.851-07:002019-09-03T01:18:10.851-07:00பாப்பி செடிகளை பற்றியும் (Poppy), நாம் சமையலில் பய...பாப்பி செடிகளை பற்றியும் (Poppy), நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver somniferum) பாப்பி செடியின் விதைதான் என்பதுவும். இதன் காய்களை கீறும்போது வடியும் பால்போன்ற திரவம்தான் அபின் (Opium) என்பதும் நான் ஏற்கனவே அறிந்த விஷயம்தான் என்றாலும் ... இப்போதுதான் அதன் மலர்களை பார்க்கிறேன் ...வாவ் .. பியூட்டி ... நன்றி சகோதரி !!!<br />https://www.scientificjudgment.com/ <br /> Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22909036527694674812016-10-11T09:28:04.221-07:002016-10-11T09:28:04.221-07:00உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி சிவக்குமார்! ...உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி சிவக்குமார்! நீங்கள் சிறந்த கவிஞர் என்றறிகிறேன்! நானே எழுதும் போது நீங்கள் தாராளமாக முயலலாம்! என் மொழிபெயர்ப்பு நன்றாயிருக்கிறது என்ற உங்கள் பின்னூட்டம் கண்டு உவப்பு! ஊமைக்கனவுகள் தளம் வழி வந்ததற்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-26890065008152494682016-10-11T09:22:36.190-07:002016-10-11T09:22:36.190-07:00சொந்த வீட்டுக்குக் குடிபோனதன் காரணமாக கீதமஞ்சரி இர...சொந்த வீட்டுக்குக் குடிபோனதன் காரணமாக கீதமஞ்சரி இரு மாதங்கள் இணையம் வரவில்லை. இப்போது இயங்க ஆரம்பித்துவிட்டார். நீங்கள் கீதா கவிதைகளின் ரசிகர் என்றறிந்து மகிழ்ச்சி! நீங்களும் சிறந்த கவிஞர் என்றறிகிறேன். வாழ்த்துக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-12435443544776700552016-10-10T14:07:47.608-07:002016-10-10T14:07:47.608-07:00சகோதரி கீதமஞ்சரி அவர்களின் வலைப்பக்கம் என்னவாயிற்ற...சகோதரி கீதமஞ்சரி அவர்களின் வலைப்பக்கம் என்னவாயிற்று?<br />அவரின் கவிதைகளின் ரசிகன் நான்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11381706268456296702016-10-10T14:02:29.296-07:002016-10-10T14:02:29.296-07:00ஆகா.
என்னவொரு அழகிய கவிதை. பொறாமையாய் இருக்கிறது.இ...ஆகா.<br />என்னவொரு அழகிய கவிதை. பொறாமையாய் இருக்கிறது.இப்படி ஒரு கவிதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்று.(அதற்கு நான் ஆங்கிலேயர் நாட்டுக்கல்லவா போயிருக்க வேண்டும் .ஆப்பிரிக்காவுக்கல்லவே)<br />தங்களின் மொழிபெயர்ப்பும் ஊமைக்கனவின் கவிதையும் வெகு அருமை.<br />நன்றி<br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-53177820309432346652016-10-04T23:05:27.003-07:002016-10-04T23:05:27.003-07:00வாங்க சகோ. வணக்கம். மீள்வருகைக்கு நன்றி. என் வே...வாங்க சகோ. வணக்கம். மீள்வருகைக்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்றுப் பதிவிட ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி. கவிதையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு திருத்தி வெளியிடுங்கள். என் ஆக்கம் எளிமையும், வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற உங்கள் மதிப்புரை கண்டு மகிழ்கின்றேன். சாதாரணமாக நான் கவிதை என்ற வடிவத்தைக் கையாள்வதில்லை. அதில் எனக்குத் தேர்ச்சியில்லை; அதிக நேரம் பிடிக்கும் என்பது முக்கியக் காரணம். உரைநடை எழுத இலகுவாய் இருக்கிறது என்பதும் இன்னொரு காரணம். எப்போதாவது தான் கவிதை எழுதத்தோன்றும். இதை எழுதியதற்கு உங்கள் கவிதை உந்துசக்தியாக இருந்தது. வெறுமனே அருமை, நன்று என்று பின்னூட்டம் எழுதிச் சென்றிருந்தீர்கள் என்றால் இதை எழுதியிருக்க மாட்டேன். எனவே என் பதிவுக்கு நேரமொதுக்கி வாசித்ததுமின்றி கவிதையுடன் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏற்கெனவே யாப்பிலக்கணத்தை எளிய முறையில் போதித்ததற்குக் குரு தட்சிணை பாக்கியிருக்கிறது. நன்றிக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை. மீண்டும் நன்றி, நன்றி, நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54294991299148213242016-10-04T18:23:29.712-07:002016-10-04T18:23:29.712-07:00வணக்கம் சகோ.
உங்கள் மேற்குறித்த மொழியாக்கத்திற்கா...வணக்கம் சகோ.<br /><br />உங்கள் மேற்குறித்த மொழியாக்கத்திற்கான என் பின்னூட்டம் உயர்வு நவிற்சியன்று.<br />இயல்பு கூறியதே!<br /><br />உங்கள் பாடலையும் ஆசிரியப்பாவின் இனங்களொன்றனுள் உட்படுத்த முடியும்.<br />ஓசையுட் பட்டு அதுவும் மரபினுட்பட்டதே ஆகும்.<br /><br />ஒரு படைப்பு/ஆக்கம் ஒரு நிமிடத்தில் எழுதப்பட்டாலும் வருடங்களின் நீட்சியில் முடிக்கப்பட்டிருந்தாலும் அதன் தன்மை சார்ந்துதான் மதிப்பீடமையும்.<br /><br />நானெழுதியது குறித்த என் மதிப்பீடு இன்னும் இன்னும் அவ்வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே!<br /><br />மூலபாடலை ஒருவடிவத்துள் அடைத்தேனேயன்றி அன்றைய தொடர்பயண அயர்ச்சியும் மனநிலையும் அதில் நான் காணும் குறைகளுக்குப் பெருங்காரணம்.<br /><br />மீள்வாசிப்பில் எனக்குப் புலப்பட்டதாகக் கூடியது அவற்றைத்தான்.<br /><br />நிற்க,<br /><br />நீங்கள் ஏற்பினும் மறுப்பினும் என்னுடையதைவிட உங்கள் ஆக்கம் எளிமையும் வடிவமும் கொண்டு இருக்கிறது என்ற என் முந்தைய கருத்தை மறுப்பதற்கில்லை.<br /><br />இருப்பினும் உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன்.<br /><br />பதிவிடுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-77903717392884176632016-10-04T18:21:13.292-07:002016-10-04T18:21:13.292-07:00This comment has been removed by the author.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52450976776676982672016-10-04T08:43:38.067-07:002016-10-04T08:43:38.067-07:00உங்கள் மீள்வருகைக்கு என் முதல் நன்றி சகோ. நான் எ...உங்கள் மீள்வருகைக்கு என் முதல் நன்றி சகோ. நான் எழுதியதை ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்யச்சொன்னால், உங்களுடையதை விட என்னுடையது சிறந்தது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல இது போர் எழுச்சிப் பாடல். சந்தம் மிகவும் முக்கியம். ஆனால் என் பாடலில் சந்தமோ எழுச்சியோ சுத்தமாக இல்லை. என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீங்கள் பாராட்டினாலும், உங்களுடையதை விட என் கவிதை மேம்பட்டது என்று ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இதை எழுதுவதற்கு இரண்டு மணிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். ஆனால் நீங்கள் எழுதத் துவங்கினால் கவிதை மழையாகப் பொழிகிறது. உங்கள் ஆக்கத்தைத் தனிப்பதிவாக வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். தனிப்பதிவாகப் போடுமளவுக்கு என்னுடையது அவ்வளவு சிறந்த ஆக்கமில்லை என்பதால் உங்கள் ஆலோசனையை ஏற்க முடியாதவளாய் இருக்கிறேன். உங்கள் வாழ்த்தும், பாராட்டும் கண்டிப்பாக என்னை மெருகேற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மிகவும் நன்றி சகோ!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-88556300301948579552016-10-04T08:28:50.302-07:002016-10-04T08:28:50.302-07:00மிக அரிய பதிவு என்ற பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த ந...மிக அரிய பதிவு என்ற பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கவிதையை அனுபவித்துப் படித்தமைக்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8575619578792198842016-10-04T05:24:10.071-07:002016-10-04T05:24:10.071-07:00வணக்கம் சகோ.
மன்னிக்க …..! தொடர மறந்தேன்.
முதலில...வணக்கம் சகோ.<br /><br />மன்னிக்க …..! தொடர மறந்தேன்.<br /><br />முதலில் உங்கள் மொழியாக்கத்திற்குப் பாராட்டுக்கள்.<br />நான் எழுதியதைவிட உங்கள் ஆக்கமே சிறந்தது.<br />அதற்கு முக்கிய காரணம் பாடுபொருளின் எளிமை.<br /><br />உங்கள் பதிவில் இருந்த மொழிபெயர்ப்பினை நான் இந்த நடையில் எழுதிப்போனதற்குக் காரணம், இந்தப் பாடல் ஓசையால் உயிர்பெறும் பாடல்.<br />மூலப்பாடலில் இருக்கும் தாளக்கட்டுகளும், தாளச்சொற்களும் சொல்லின் ஓடும் லயமும் அம்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியன் என்ற வகையில் அறிந்வேன் எனினும் போர்க்களங்களில் உணர்ச்சியூட்டும் வகையில் இந்தப் பாடல் பாடப்பட்டிருக்கிறது என்ற உங்கள் தகவலால் மூலமொழியில் இப்பாடலின் சந்தமே முதன்மையாய் என்னுள் ஓடிற்று.<br /><br />ஆயிரமாயிரம் வீரர்களின் அணிவகுப்பில் நம் மரபில் உள்ளது போல போர்ப்பரணிப்பாட்டு!<br /><br />களமாட ஊட்டும் வெறி.<br /><br />ஓசை ஒழுங்கிற்கு இப்பாடலைக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணம் இதுவே. சற்று அதிகப்பிரசிங்கித்தனமாய் இருப்பினும் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று அறிவேன்.<br /><br />அதற்கான உரிய முயற்சியோ, போதுமான நேரமோ நான் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை.<br /><br />நான் எழுதிய வடிவம் செம்மைப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள் அதிகம்.<br />இதோ இப்பொழுது உங்களின் மொழியாக்கத்தின் ஒப்பீட்டிற்காக நான் செய்ததைப் பார்க்க எனக்கே அது புலப்படுகிறது.<br /><br />எனவே மீண்டும் நான் கூறுவது உங்களின் மொழியாக்கமே சிறந்தது.<br /><br />ஏன்…..?<br /><br />உணர்வெழுச்சியூட்டும் இதுபோன்ற பாடல்களின் நிலைபேறு பாடுபொருளும் சந்தமும் மட்டும் கொண்டு வாழ்வதல்ல.<br />அது தன்னுள் எளிமையும் சார்ந்து இயங்குவது.<br /><br />“ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ” என்ற சுதந்திரப்போராட்ட எழுச்சிப்பாடலைக் கற்பனை செய்து பாருங்கள்.<br />அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே<br />உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்<br />என்ற பாரதிபாட்டும் இவ்வகைதான்.<br /><br />சந்தமும் பாடுபொருள் எளிமையும் ஒரு பாடலை எவ்வளவு உணர்வெழுச்சி உள்ளதாகச் செய்துவிடுகின்றன.<br /><br />இன்னும் சில நயங்களும் என் வாசிப்பில் பட்டன.<br />வானம்பாடிகள் சுதந்திரத்தின் குறியீடு.<br />சூரிய உதயமும் மறைவும் வாழ்தல் இறத்தலின் குறியீடுகள்.<br />அஸ்தமனம் ஒளிமங்கி இருக்க, வீரரின் மறைவு ஒளிதந்து நிற்றல் இதன் முரண். <br /><br />உங்கள் பாடல் எளிமையும் இனிமையும் பொருளாழமும் நிறைந்துள்ளது.<br />சகோ. கீதமஞ்சரி அவர்கள் உங்கள் பாடல்பற்றித் தம்பின்னூட்டத்தில் குறித்த அழகியல் இதுதானென நினைக்கிறேன்.<br /><br />என் முயற்சியும் அதற்குக் காரணமாயிற்று என்றறிய மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.<br /><br />உங்கள் ஆர்வமும் வாசிப்பும் மென்மேலும் உங்களை மெருகேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.<br /><br />பாடலையும் தங்களின் இந்த மொழியாக்கத்தையும் தனிப்பதிவாக்கினால் என்போல் பின்னூட்டத்தைத் தொடராதோர் பயன்பெறக்கூடும்.<br /><br />மீண்டும் தங்கட்கென் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-47795370518620743532016-10-04T04:20:09.363-07:002016-10-04T04:20:09.363-07:00மிக அரிய பதிவு . கவிதையின் இரண்டாம் பத்தி நெஞ்ச...மிக அரிய பதிவு . கவிதையின் இரண்டாம் பத்தி நெஞ்சைத் தொடுகிறது . நம் எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு சமர்ப்பணம் பொருத்தமோ பொருத்தம் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39568706472492556052016-10-04T00:03:21.523-07:002016-10-04T00:03:21.523-07:00அருமையான பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீத...அருமையான பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா! ஊமைக்கனவுகள் கவிதையை வாசித்தவுடன் நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று முயன்றதன் விளைவு இது. அவருடைய கவிதையுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமேயில்லை. இதுவும் அழகாய் இருக்கிறது என்று நீ சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11504320381290040172016-10-03T20:11:58.954-07:002016-10-03T20:11:58.954-07:00மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொருவரும் அவசியம் அறிந்...மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களை இப்பதிவில் அள்ளித்தந்துள்ளீர்கள்.. போர்வீரர்களின் நினைவுச்சின்னம் பாப்பி மலர் என்று அறிந்திருந்தாலும் அதற்கான மூலம் எதுவாக இருக்குமென்று அறியத் தோன்றவில்லை. இங்கே அற்புதமான கவிதை வாயிலாய் போர்வீரர்களின் மன உணர்வினை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கவிதையின் சாரத்தை கவிதையாகவே தந்திருக்கலாமே என்று நினைத்தேன். அந்தக் குறையையும் பின்னூட்டத்தில் போக்கிவிட்டீர்கள். ஊமைக்கனவுகள் அவர்கள் எழுதிய கவிதை ஒரு அழகியல் என்றால் தாங்கள் எழுதியது இன்னொருவகையான அழகியலைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் மூலக்கவிதையின் சாரம் அப்படியே கடத்தப்பட்டுள்ளது. அதுதானே முக்கியம். புதியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35502719836867619572016-10-03T11:13:02.848-07:002016-10-03T11:13:02.848-07:00
உங்கள் கவிதை தந்த இன்ஸ்பிரேஷன் காரணமாக, நான் சொல்...<br />உங்கள் கவிதை தந்த இன்ஸ்பிரேஷன் காரணமாக, நான் சொல்ல நினைத்ததைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் எழுதியது இது. எதுகை மோனையோ, இலக்கண விதிமுறைகளோ எதுவும் இதற்கில்லை. <br />உண்மையில் இதைத் தான் சிறுபிள்ளைத் தனமான முயற்சியென்று சொல்லவேண்டும்! <br /><br />வரிசையில் அணிவகுக்கும் சிலுவைகள் மேல்<br />மோதியாடிடும் பாப்பி மலர்க் கூட்டம்!<br />விண்ணதிர துப்பாக்கி வெடித்தும், பயமின்றிப்<br />பண்ணிசைத்திடும் வானம்பாடி பறவைகள்!<br />இதுதான் பிளாண்டர்ஸ் போர்க்களம்!<br /><br />வீழ்ந்துபட்டோம், மண்ணில் இன்று;<br />வாழ்ந்திருந்தோம் சிலநாள் முன்பு.<br />விடியலில் உயிர்த்து, மடிதலில் ஜொலித்தோம் <br />நேசித்தும், நேசிக்கப்பட்டும் வாழ்ந்த யாம்<br />நசிந்து கிடக்கிறோம், இப்போர்க்களத்தில்!<br /><br />விட்ட இடத்திலிருந்து போரைத் தொடர்க<br />உம் கைகளில் ஒப்படைத்த தீபத்தை<br />உயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க<br />எம் சொற்களை நினைவில் நிறுத்திடுக<br />இறந்துவீழ்ந்த எம்சொல்லில் நம்பிக்கை இழப்பீராயின்<br />கிறக்கம்தரும் பாப்பிமலர் பூப்பினும் <br />உறக்கமில்லை என்றும் எமக்கு! <br /><br /><br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43506791091971348972016-10-03T11:03:09.551-07:002016-10-03T11:03:09.551-07:00This comment has been removed by the author.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17249666912856037042016-10-03T04:53:33.273-07:002016-10-03T04:53:33.273-07:00வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்துக்க...வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80716523706825729542016-10-03T03:54:32.153-07:002016-10-03T03:54:32.153-07:00"தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்ட..."தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்....! சிறுபிள்ளை முயற்சிதான்...!" <br />வாங்க சகோ! வணக்கம். தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி! கவித்துவமான பின்னூட்டம் கண்டு, அதைவிட மகிழ்ச்சி! சிறுபிள்ளை முயற்சி என்று சொல்லியிருப்பது, உங்கள் தன்னடக்கத்தின் மிகை!<br />நிற்க. இனி உங்கள் மொழியாக்கம் பற்றி…<br />மலர்அலை<br />என்ன அழகான சொல்லாட்சி! காற்றில் பாப்பி மலர்கள் அலைகின்றனவா? அலைஅலையாய் மலர்கள் அணிவகுக்கின்றனவா? தமிழுக்குப் புது வரவு?<br />பாப்பிச் செடியின் தண்டு மிகவும் மெல்லியது; சாதாரண காற்றுக்குக்கூட உறுதியாக நில்லாமல், ஆடக்கூடியது என்பதால், இது தான் எவ்வளவு பொருத்தம்! <br />காற்றில் பாப்பி மலர்கள், அங்குமிங்கும் அலைந்து ஆடி, அலையலையாய், சிலுவைகளினிடை போய்வரும் காட்சி, உங்களின் இந்தப் பொருத்தமான சொல்லாட்சியால், உயிர்பெற்று எழுந்து விட்டது!<br />இக்கவிதையை எழுதிய போது கவிஞர் Grow என்று முதலில் எழுதியதாகவும், பின்னர் தான் blow என்று மாற்றியதாகவும் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />“அன்றங்கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!<br />என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்”<br />என்ற வரிகள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மூலக்கவிதையின் உணர்ச்சியை இம்மி பிசகாமல், வாசகருக்குக் கடத்தும் திறன் பெற்ற உன்னத வரிகள் இவை!<br />முதல் வரியை வாசித்த போது, ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,’ என்ற பாடலின் நினைவு வந்து போனது.<br />பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்<br />உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!<br />பறக்கும் இப்பாப்பி என்பதும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. போதையில் மேலெழுந்து பறப்பது போன்ற அனுபவம் கிட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். <br />மொத்தத்தில் ஒரு புதிதாய் ஒரு கவிதையைச் சுவைத்தது போன்ற அனுபவம் கிட்டியது. <br />உறங்கா விழிபெறும் பிளாண்டர் போர்க்களம் என்ற அற்புதமான தலைப்பில் இக்கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.<br />யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இன்னும் பலருக்கு இது சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை!<br />என் பதிவின் மூலம் தமிழுக்கு அருமையான மொழியாக்கம் ஒன்று கிடைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!<br />மிகவும் நன்றி.<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-7261132632373083702016-10-02T18:14:10.605-07:002016-10-02T18:14:10.605-07:00நினைவாற்றல், ரசனை, நாட்டுப்பற்று, மொழியார்வம், மொழ...நினைவாற்றல், ரசனை, நாட்டுப்பற்று, மொழியார்வம், மொழியாக்கம் என்ற அனைத்தையும் உள்ளடக்கி பல செய்திகளைத் தந்துள்ள பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17114307743068153722016-10-02T12:05:18.893-07:002016-10-02T12:05:18.893-07:00வணக்கம் சகோ.
சற்றுத் தாமதம்தான். ஊரில் இல்லை. இன்...வணக்கம் சகோ.<br /><br />சற்றுத் தாமதம்தான். ஊரில் இல்லை. இன்றே வந்தேன். <br /><br />பயணங்கள் எத்தனை எத்தனையோ செய்திகளையும் அனுபவங்களையும் நமக்குத் தந்துபோவன.<br /><br />உங்களின் பயணத்தால் எங்களுக்கு ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.<br /><br />பாப்பி மலர் பற்றிய செய்தியும் இந்த நறுங்கவிதையும் உங்கள் மூலமாகவே அறிகிறேன்.<br /><br />அதற்கு நன்றி.<br /><br />கவிதைக்கு உங்களின் மொழிபெயர்ப்பினை ரசித்தேன். மூலத்தினோடு பெரிதும் ஒட்டி மொழிபெயர்ப்பினை செய்திருக்கிறீர்கள்.<br /><br />////தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்/////<br /><br />இதுதான் இந்தக் கவிதையின் நுட்பம்.<br /><br />கவிதை சொற்கள் கடந்த பொருளுடையது.<br /><br />அதையும் காட்டி இருக்கிறீர்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.<br /><br />போர் தேவையற்றது என்று சொன்ன அசோகனும் கூடத் தன் படைகளைக் கலைக்காமல் உரிய பயிற்சியைத் தொடரச்செய்தான் என்று படித்திருக்கிறேன்.<br /><br />பூக்களைப் பரிசாகக் கொடுக்க விரும்பும் நம்முன் துப்பாக்கிகள் நீட்டப்படுமாயின் நாம் என்ன செய்வது?<br /><br />நிற்க, தங்களின் மொழிபெயர்ப்பின் வழி மூலப்பாடலை ஒட்டி ஒரு மொழியாக்கம்....!<br /><br />சிறுபிள்ளை முயற்சிதான்...!<br /><br />நீங்கள் தவறாக நினைத்தால்தான் என்ன என்ற உரிமையில் எழுதிப்போகிறேன்...!<br /><br /> பாப்பி பூக்கும் ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்.<br /><br />பாப்பி மலர்அலை ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்!<br />சாப்புதை சிலுவை களினிடை போய்வரும்!<br />மண்ணில் புதைந்த மாசறு வீரம்<br />விண்ணில் வானம் பாடிகள் பாடித்<br />துப்பாக் கிகளின் துணிச்சல் அடக்கும்!.<br /><br />அன்றங் கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!<br />என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்!<br />அன்பு செய்தோறும் செயப்பட் டவரும்<br />இன்று ஃபிளாண்டர்ஸ் போர்சவக் குழிகளில்….!<br /><br />வெம்பகை அழிக்க வீரர்காள் வருக!<br />எம்கை தீபம் ஏந்துக நும்கை!<br />உமக்கே இனியது! உயர்கநும் கரங்கள்!<br /><br />அன்றி,<br /><br />இறந்தவர் சொல்லிதென் றிகழ்வீ ராயின்<br /> பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்<br />உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35740627042053184192016-10-02T06:35:26.997-07:002016-10-02T06:35:26.997-07:00வணக்கம் வெங்கட்! தரமான, சுவையான எழுத்துக்குச் சொந...வணக்கம் வெங்கட்! தரமான, சுவையான எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்களிடமிருந்து பதிவு வெகு ஜோர் என்ற பாராட்டுக் கிடைத்ததை நினைத்து மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன். மிக்க நன்றி வெங்கட்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21604938023410272682016-10-02T06:33:21.440-07:002016-10-02T06:33:21.440-07:00வாங்க துரை சார்! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும...வாங்க துரை சார்! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-6250497048156922902016-10-02T06:32:25.929-07:002016-10-02T06:32:25.929-07:00நலமா செந்தில்? அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன...நலமா செந்தில்? அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி. தொடர்வதற்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58494005224872875122016-10-02T01:32:29.610-07:002016-10-02T01:32:29.610-07:00பாப்பி மலர்கள் குறித்த தகவல்கள், கவிதை என பதிவு வெ...பாப்பி மலர்கள் குறித்த தகவல்கள், கவிதை என பதிவு வெகு ஜோர்.... <br /><br />பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8602680010283642202016-10-01T22:27:07.054-07:002016-10-01T22:27:07.054-07:00அரிய தகவலை அறியும்படிச் செய்தீர்கள்..
>>>...அரிய தகவலை அறியும்படிச் செய்தீர்கள்..<br /><br />>>> இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம்.எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை.<<<<br /><br />உண்மைதான்.. வீரர்களின் ஆன்மாக்களுக்கும் உறக்கமில்லை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com