நல்வரவு

வணக்கம் !

Tuesday 12 January 2021

பூதம் காக்கும் புதையல் - சிறுவர் நாவல்


 அமேசானின்  #pentopublish4 போட்டிக்காகப் 'பூதம் காக்கும் புதையல்' எனும் சிறுவர் நாவலை, கிண்டிலில் 02/01/2021 அன்று வெளியிட்டேன்.    

இது பலரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நாவல் பற்றிச் சிறார் எழுத்தாளர் விழியன் (இயற்பெயர் உமாநாத் செல்வன்) அவர்கள் மிகவும் பாராட்டித் தம் முகநூல் பக்கத்தில், இவ்வாறு எழுதியுள்ளார்:-

கிண்டிலில் ஓர் அற்புதமான சிறார் நாவல் வாசித்தேன். (இன்று இலவசமும் கூட) விறுவிறு நடை. தொய்வே இல்லை. பன்முகத்தன்மை கொண்ட எழுத்து. கலையரசி அவர்கள் மேலும் மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்.  சமீபத்தில் மிகவும் ரசித்த நூல். Evening was so thrilled. எங்க இருந்தாங்க, இத்தனை நாள்னு, தெரியல 

பிரபல சிறார் எழுத்தாளரிடமிருந்து, கிடைத்த இந்தப் பாராட்டு, என்னை மேலும் எழுத, ஊக்குவித்துள்ளது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!