நல்வரவு

வணக்கம் !

Monday 3 April 2017

என் பார்வையில் - 'சின்னவள் சிரிக்கிறாள்,' - கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்:- திரு மீரா செல்வகுமார்

காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கைபேசி:-  8903279618

பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி, கருக்கொலையோ சிசுக்கொலையோ செய்யும் தமிழ்ச் சமூகத்தில், ‘அந்திவானின் செவ்வொளிக் கீற்று,’ என்றும், சிறு சிரிப்பில், உயிர் ஒளித்து வைக்கும் தேவதையென்றும், நூல்முழுக்க மகளின் புகழ் பாடும், இது போன்றதொரு  கவிதைத் தொகுப்பு, ஏற்கெனவே தமிழில் வெளியாகியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில், நான் படித்த கவிதை நூல்கள் மிகச்சிலவே.

தந்தைக்கு மகள் மீதான அபரிமித பாசம், பல கவிதைகளில் உணர்ச்சிப் பிரவாகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து, ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்கின்றது.

Saturday 1 April 2017

தட்டச்சு நினைவுகள்

                                                     (படம் - நன்றி இணையம்)

பிரபல பதிவரான திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், சும்மா என்ற தம் வலைப்பூவில், சாட்டர்டே ஜாலி கார்னர் என்ற பகுதியில், தட்டச்சு நினைவுகள் பற்றிய  என் கட்டுரையை, இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார். அவருக்கு என் இதயங்கனிந்த நன்றி.  
மேலும் படிக்க..