முன்னெப்போதும்
இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட இம்மோசடிப் பேர்வழிகளிடம்
ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான்.
கடந்த ஏப்ரல் மாதம்
கர்நாடகா டி.ஜி.பி, ஓம் பிரகாஷ் அவருக்கு வந்த கைபேசி அழைப்பு, வங்கியிலிருந்து வந்ததாக
நம்பி, ஏ.டி.எம். கார்டு மற்றும் அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION
NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார். அதே போல் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளரும்,
பதினான்காயிரம் ரூபாயைப் பறிகொடுத்தார்.
