நல்வரவு

வணக்கம் !

Sunday 22 November 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு

 


ஆசிரியர்: கீதா மதிவாணன்

கோதை பதிப்பகம், திருச்சி.  செல் 91-9080870936. விலை ரூ200/-

திருச்சியில் பிறந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் கீதா மதிவாணன் அவர்களின், முதல் சிறுகதைத் தொகுப்பு இது.  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசனின் சிறுகதைகளை, ‘என்றாவது ஒரு நாள்,’ என்ற தலைப்பில், ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் 28 சிறுகதைகள் உள்ளன.  பத்தாண்டுகளுக்கு முன்னரே  எழுதப்பட்ட இக்கதைகள், ஏற்கெனவே பெங்களூர் புஸ்தகாவில் மின்னூலாக வெளிவந்திருந்தாலும், அச்சில் இப்போது தான், தொகுப்பாக வெளியாகியுள்ளது.  இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாத்திரங்கள்,  அக்கம்பக்கத்திலும், நம்மூரிலும் அடிக்கடி நாம் சந்திக்கும் மாந்தர்களே.  இது அவருடைய முதல் தொகுப்பு என்பதால், சிறு வயது முதல் தாம் கண்டு, கேட்டு வளர்ந்த மாந்தர்களின் வாழ்க்கையைக் கதைகளாகப் படைத்துள்ளார்.  

இத்தொகுப்பில் என் மனதைத் தொட்ட கதை, ‘அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’.  இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

Sunday 27 September 2020

Nara and Sara - Children story in amazon kindle




அன்புடையீர்! வணக்கம்.

26/09/2020 பேத்திக்கு முதல் பிறந்த நாள்!
என் பேத்தியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு, அமேசான் கிண்டிலில் ஒரு சிறுவர் கதை NARA AND SARA என்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். தமிழில் இது போல் முழுக்க முழுக்கப் படங்களுடன் கதை வெளியிடும் வசதி இன்னும் அமேசானில் கொண்டு வரப்படவில்லையென்பதால், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். நாளை 28/09/2020 பகல் 12.30 மணி வரை இலவசம்.
கதையை வாசிக்க இணைப்பு:-


Monday 21 September 2020

சிறுவர் பாடல் - சிட்டுக்குருவி

 


                     பெண்                                                                      ஆண்

செப்டம்பர் 2020   வாசகசாலையில்  நானெழுதிய  சிறுவர் பாடல்  ... 
சிட்டுக்குருவி.


சிட்டுக்குருவி பட்டுக்குருவி

சிறகை விரித்திடும் அழகைப் பார்

கூம்பு அலகால் கொத்தித் தின்னும்

குட்டிக் குருவியின் அழகைப் பார்....



                                                       


Thursday 17 September 2020

குழந்தைப் பாடல் - நிலா நிலா ஓடி வா

 

                                           (நன்றி படம் - செய்திப்புனல் - இணையம்)

செப்டம்பர் 2020   பூஞ்சிட்டு சிறார் மின்னிதழில்   எழுதிய குழந்தைப்பாடல்

நிலா நிலா ஓடி வா 

வெள்ளை நிலா ஓடி வா

பிள்ளை முகம் மலர வா

பால் அமுது ஊட்ட வா

தொடர்ந்து வாசிக்க..

Wednesday 2 September 2020

சிறார் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடல்


அனைவருக்கும் வணக்கம்.

வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும், வலைத்தமிழ் மொட்டு எனும் சிறார் மின்னிதழுக்காக, அவர்களது வலைத்தமிழ் டிவியில், சிறார் இலக்கியம் குறித்து, நெறியாளர் பிரவீணாவுடன், 30/08/2020 மாலை மணி 6 முதல் 7 மணிவரை, கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது

Sunday 16 August 2020

கைவீசம்மா கைவீசு குழந்தைப்பாடல்

                                  படம் -  நன்றி அஜ்ஜிராஜ்.

ஆகஸ்ட் 2020 பூஞ்சிட்டு இதழில், நானெழுதிய 

கைவீசம்மா குழந்தைப்பாடல்..

"கைவீசம்மா கை  வீசு

கடலுக்குப் போகலாம் கை வீசு

கப்பல் பார்க்கலாம் கை வீசு..."

தொடர்ந்து வாசிக்க.....

https://www.poonchittu.com/2020/08/kuzhandhai-padalgal/kai-veesamma/

Friday 31 July 2020

மியாவ் மியாவ் பூனைக்குட்டி - குழந்தைப் பாடல்

                                                     Thanks - Picture-Unsplash.com

பூஞ்சிட்டு மின்னிதழில் நானெழுதிய குழந்தைப்பாடல்.....

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசைக்காரப் பூனைக்குட்டி -

மேலும் வாசிக்க.....






எழுத்து வடிவம் ஞா.கலையரசி &  ஒலி வடிவம் ப்ரீத்தி வசந்த்




Wednesday 29 July 2020

EIA DRAFT 2020 - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020


                   (படம் நன்றி - PTEacademic.exam.com)    
                  

இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டுமானால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி (1986) அனுமதி பெற வேண்டும்.  அதன்படி சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்ட்த்தின் படி, அறிக்கை தயார் செய்ய வேண்டும்.  அரசு சார்பில் ஒரு குழு இந்த அறிக்கையை ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லையென்றால் மட்டுமே, தொழில் தொடங்க அனுமதி கொடுக்கும்.

Friday 17 July 2020

குழந்தைகளுக்காகவே பூஞ்சிட்டு மின்னிதழ் உதயம்!




15/07/2020 கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்கள் பிறந்த நாள். அன்று மாலை பூஞ்சிட்டு வெற்றிகரமாகக் கூட்டை விட்டு, வெளிவந்து, சிறகடித்துப் பறந்துவிட்டது. தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் பூஞ்சிட்டு சிறப்பான தடம் பதிக்கும் என்று நம்புகிறோம்.
அண்ணா நினைவு சிறார் சிறுகதைப் போட்டியில், பங்குப் பெற்ற எழுத்தாளர்கள் கூடி, குழுவாக இணைந்து, மிகக் குறுகிய காலத்தில், இந்த மின்னிதழைத் துவக்கியுள்ளோம். இதில் பெரும்பான்மையானவர்கள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால், முதல் இதழே அருமையாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், வீட்டில் அடைபட்டிருக்கும் வாண்டுகள், வாசிப்பதற்குச் சுவையான கதைகள், இதில் உள்ளன. எளிமையான அறிவியல் சோதனை பக்கம், புதிர்ப்பக்கம், இயற்கை பற்றிய புரிதலை, அறிமுகப்படுத்தும், நம் தோழன் பக்கம் எனக் குழந்தைகளுக்குச் சுவாரசியமூட்டக்கூடிய பகுதிகள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Monday 20 April 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே!



நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் அவர்களின் இறப்பு, ஈடு செய்ய முடியாப் பேரிழப்பு!

கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.  இந்தப் பேரிடர் காலத்தில், அவர்களின் இறப்புச் செய்தி தரும் வேதனையைக் காட்டிலும், அப்படி இறந்த மருத்துவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் காட்டுமிராண்டித் தனம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

ஏற்கெனவே இரண்டு மருத்துவர்கள் இறந்த போது நடந்தது போல், டாக்டர் சைமன் உடல் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒரு கூட்டம் சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியிருக்கிறது. 

குடும்பங்களைப் பிரிந்து, தம் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக நோய்வாய்ப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு, நாம் காட்டும் நன்றிக்கடன் இது தானா? போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லையென்றாலும், தொடர்ந்து சேவை செய்து தம் உயிரை இழக்கும் மருத்துவர்கள், நம் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா?

Saturday 25 January 2020

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - நூல் அறிமுகம்



கவிஞர் ஜான்ஸி ராணி
வாசகசாலை பதிப்பகம்
விலை ரூ 80/-
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் பெற்ற, கவிஞர் ஜான்ஸி ராணியின், முதல் கவிதைத்தொகுப்பு இது.

Monday 6 January 2020

சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்



சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ 340/-

பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாச் சூழ்நிலையில், ஊர் ஊராகப் பயணம் செய்ய, அவர்களின் நினைவுகள் வழியே, கதை விரிகிறது.

‘அன்புள்ள ஏவாளுக்கு,’ நாவல் – (ஆலிஸ் வாக்கர்) வாசிப்பனுபவம்




அன்புள்ள ஏவாளுக்கு,’  நாவல் – (ஆலிஸ் வாக்கர்
தமிழில்ஷஹிதா
எதிர் வெளியீடுரூ350/-

அமெரிக்க நாவலாசிரியை ஆலிஸ் வாக்கர் எழுதியதும், புலிட்சர் பரிசை வென்றதுமான, ‘The Colour Purple,’ என்ற நாவலை, ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ எனும் தலைப்பில், தமிழில் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார் ஷகிதா.