எல்லோருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!
பணிச்சுமை
மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, இந்த ஆண்டில் என்னால் வலைப்பக்கம் அதிகம் வரவியலவில்லை.
2018
ஆம் ஆண்டிலாவது தொடர்ந்து எழுத வேண்டும் என ஒவ்வொரு புத்தாண்டின் போதும்,
எடுக்கும் சபதம் போல், இப்போதும் எடுத்திருக்கிறேன்.
இடைப்பட்ட
காலத்தில் சில சிறுகதைப்போட்டிகளில் கலந்து கொண்டேன். மறைந்த எழுத்தாளர் திரு.க.சீ..சிவக்குமார்
நினைவுச் சிறுகதைப் போட்டியில் வளரும் எழுத்தாளர் பிரிவில் முதற் பரிசு கிடைத்தது.
நம்
பதிவுலக நண்பர் திரு வே. நடனசபாபதி அவர்களின் அண்ணன் பெயரில் இளவேனில் பதிப்பகம் நடத்திய
’வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப்போட்டிக்காக
நான் எழுதிய ’தப்புக்கணக்கு,’ என்ற கதை, நான்காவதாகத் தேர்வு
பெற்று ’வசீரும் லீலாவதியும்,’ என்ற தொகுப்பு நூலில்
இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கைச்சட்டம்
பதிப்பகம் நடத்திய வானதி விருது சிறுகதைப்போட்டிக்காக எழுதிய பித்து என்ற கதை, ‘இவளப் பிடிக்கல,’ என்ற தொகுப்பு நூலில் வெளியாகியுள்ளது.
’அந்நியன்,’ என்ற கதை, நவம்பர் 2017 கணையாழியில் வெளிவந்துள்ளது.
இனி
‘அந்நியன்,’ கதை அடுத்த பதிவில்....
வழக்கம்
போல், என் கதைகள் பற்றிய, உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...
நன்றியுடன்,
ஞா.கலையரசி