வானம் பார்த்த
வறண்ட நம் மண்ணில், நம் குழந்தைகள் “ரெயின் ரெயின் கோ அவே,” என்று மழையைப் போகச் சொல்லிப்
பாடுவது, எவ்வளவு அபத்தம்?
மழையை வா வாவெனப்
வரவேற்றுப் பாடும் என்னுடைய இந்தப் பாடல் (14/07/2019 வாசகசாலை இணைய இதழில் வெளியானது..
வான் மழையே ஓடி வா!
விண்ணமுதைப் பொழிய வா!
முகிலின் கொடையே ஓடி வா!
மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வான்)