சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர் சாலை செல்வம் அவர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினர்.