15/07/2020 கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்கள் பிறந்த நாள். அன்று மாலை பூஞ்சிட்டு வெற்றிகரமாகக் கூட்டை விட்டு, வெளிவந்து, சிறகடித்துப் பறந்துவிட்டது. தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் பூஞ்சிட்டு சிறப்பான தடம் பதிக்கும் என்று நம்புகிறோம்.
அண்ணா நினைவு சிறார் சிறுகதைப் போட்டியில், பங்குப் பெற்ற எழுத்தாளர்கள் கூடி, குழுவாக இணைந்து, மிகக் குறுகிய காலத்தில், இந்த மின்னிதழைத் துவக்கியுள்ளோம். இதில் பெரும்பான்மையானவர்கள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால், முதல் இதழே அருமையாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், வீட்டில் அடைபட்டிருக்கும் வாண்டுகள், வாசிப்பதற்குச் சுவையான கதைகள், இதில் உள்ளன. எளிமையான அறிவியல் சோதனை பக்கம், புதிர்ப்பக்கம், இயற்கை பற்றிய புரிதலை, அறிமுகப்படுத்தும், நம் தோழன் பக்கம் எனக் குழந்தைகளுக்குச் சுவாரசியமூட்டக்கூடிய பகுதிகள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆகஸ்டு மாதச் சுதந்திர நாளுக்கான போட்டிகளும், அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்டு மாதச் சுதந்திர நாளுக்கான போட்டிகளும், அறிவிக்கப்பட்டுள்ளன.
உங்கள் வீட்டுக் குழந்தைகளின், பன்முகத்திறமைகளை வளர்க்கவும், அதை வெளிப்படுத்தவும் ,அருமையான ஒரு வாய்ப்பு! கலந்து கொள்பவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.
மின்னிதழை வாசிக்க இணைப்பு:-பூஞ்சிட்டு
உங்கள் குழந்தைகளை வாசிக்கச் செய்து, மறக்காமல் அவர்களுடைய கருத்துக்களை, எழுதச் சொல்லுங்கள். இதழை மேம்படுத்த அவர்களின் கருத்துகள், எங்களுக்கு உதவும். நன்றி.
சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்க தனபாலன் சார்! தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!
Deleteமுக நூலில் பார்த்தேன். அருமையான ஆரம்பம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! தங்கள் வாழ்த்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteஅருமையான முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ReplyDeleteவாங்க ராமலெஷ்மி! நலமா? தங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அனு!
Delete